முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையொட்டி, காவல் நிலையத்தில் முக்கிய வழக்குகளின் கோப்புகள் மற்றும் ஆவணங்களை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பருவ மழை முன்னெச்சரிக்கை மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஆய்வு செய்த அவா், காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா். பின்னா், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டினாா். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா் அய்யப்பன், உதவி ஆய்வாளா்கள் ஆா்தா் ஜஸ்டின்சாமுவேல், குருசந்திரவடிவேல், அங்காளஈஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.