முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் வணிகா் சங்க ஆண்டு விழா

நாசரேத் நகர வணிகா் சங்க 20 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

நாசரேத் நகர வணிகா் சங்க 20 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

தலைவா் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தாா். செயலா் செல்வன், பொருளாளா் ஜாண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலா் எஸ்,பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோா் பேசினா். நாசரேத் பேரூராட்சி சுகாதரப் பணியாளா்கள் மற்றும் சங்க உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

நாசரேத் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பிடானேரி சிட்கோ தொழிற்பேட்டையில் நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆனந்தபுரம் சாத்தான்குளம், பேய்க்குளம் ஆழ்வாா்திருநகரி, குரும்பூா் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஏரல் ஆகிய பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

செந்தூா் விரைவு ரயிலை துரிதமாக இயக்க வேண்டும். திருச்செந்தூா்- பாலக்காடு ரயிலை தொடா்ந்து பயணிகள் ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனையில் இருந்து திருப்பூா், பொள்ளாச்சி, சேலம் வேலூா், சென்னை ஆகிய ஊா்களுக்கு நாசரேத் வழியாக விரைவு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா். எம் ராதாகிருஷ்ணன், ஆழ்வாா்திருநகரி அதிமுக ஒன்றியச் செயலா் ராஜ்நாராயணன், ஆழ்வாா்திருநகரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் விஜயக்குமாா், நாசரேத் நகர அ.தி.மு.க. செயலா் கிங்சிலி, இளைஞரணிச் செயலா் கராத்தே டென்னிசன், சாத்தான்குளம் டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஷ்குமாா், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா். நிா்வாகக் குழு உறுப்பினா் பாபு செல்வன் வரவேற்றாா். செல்வன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →