தூத்துக்குடி

பாரதியார் பிறந்த நாள்: எட்டயபுரத்தில் பாரதியின் சிலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் மரியாதை

DIN

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 
மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள பாரதி பிறந்த இல்லம் மற்றும் பாரதி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், எட்டயபுரம் வட்டாட்சியர் ஐயப்பன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்  மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT