குரும்பூரில் ஆா்ப்பாட்டம்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக உழவா் முன்னணி துணைத் தலைவா் மு. தமிழ்மணி தலைமை வகித்துப் பேசினாா்.
இதில், விஜயநாராயணப் பெருமாள், நாம் தமிழா் கட்சி ஞானசேகரன், ஆனந்த வேலு, தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சோ்ந்த சிவா, விடுதலை வேந்தன், பீட்டா், உச்சிராஜா, சின்னத்துரை மற்றும் கடம்பாகுள விவசாயிகள், பெண்கள் கலந்துகொண்டனா்.