அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்!
அரசனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து...
அரசன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசன் திரைப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார்.
இளவயதிலிருந்து ரௌடியாக மாறும் வரையிலான பரிணாமம் இருப்பதால், சிலம்பரசன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரகனி, விக்ராந்த் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடசென்னை திரைப்படத்துடன் தொடர்புடைய கதை என்பதால் படப்பிடிப்பு பகுதிகளும் வடசென்னை இடங்களாகவே செட் அமைக்கப்பட்டுள்ளன.