சுமூகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?
அரசன் படப்பிடிப்பு குறித்து...
அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாள்களுக்கு முன் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் படப்படிப்பு நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என டி. ராஜேந்தர் கூறியிருந்தார்.
அவர் வெளியிட்ட ஆடியோவில், “வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க சிலம்பரசனுக்கு ஐசரி கணேஷ் முன்பணம் அளித்திருந்தார். அப்பணம் தொடர்பாக நடந்த நீதிமன்ற வழக்கிலும் அப்பணம் சிலம்பரசனுக்குதான் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இதனை மதிக்காமல் ஐசரி கணேஷ் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்துகொண்டு அரசன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐசரி கணேஷுக்குத் தர வேண்டிய ரூ. 6.5 கோடியில் ரூ. 4 கோடியை சிலம்பரசனும் மீதமுள்ள தொகையை அரசன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனராம்.
இதனால், நிறுத்தி வைக்கப்பட்ட அரசன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல், சிலம்பரசன் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.