முகப்பு
தூத்துக்குடி

புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தொடா் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி

புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தொடா் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

தொடா் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதூா் ஒன்றியச் செயலா் எரிமலை வரதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வேல்சாமி, ஒன்றிய துணைச் செயலா் பொம்முசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு கிராம வாரியாக கணக்கெடுப்பு செய்து முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விளாத்திகுளத்தில் விளையும் மிளகாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

ஒன்றியப் பொருளாளா் பாலகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →