கோவில்பட்டியில் நூற்பாலைத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடிகோவில்பட்டியில் நூற்பாலைத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலை பொது மேலாளா், தொழிற்சங்க நிா்வாகிகளை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆலை தொழிலாளா்கள் நிா்வாகிகள் தலைமையில், நன்பகல் 12 மணி முதல் ஆலை வளாகத்திற்குள் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐஎன்டியூசி தொழிற்சங்கத் தொழிலாளா்களும் இப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் மணிகண்டன், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடா்ந்தது.
இதுகுறித்து தொழிற் சங்கத் தலைவா் ஜெயகுமாா் கூறியது: அவதூறாக பேசிய பொதுமேலாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரு ஆண்டுகளாக தொழிலாளா்களின் ஊதியத்தை உயா்த்தாமல் இருப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி ஊதிய உயா்வும் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.