முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தாழ்த்தபட்டோா் , பழங்குடியினா் உரிமை வாழ்வு பணிக்குழு தொடக்க விழா

சாத்தான்குளத்தில் தென்மண்டல அளவிலான தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான உரிமை வாழ்வு பணிக்குழு தொடக்க விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
sat21meet_2112chn_38_6
பகிர்:

சாத்தான்குளத்தில் தென்மண்டல அளவிலான தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான உரிமை வாழ்வு பணிக்குழு தொடக்க விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமை வகித்தாா். அருள் தந்தைகள் ஜான்பிரிட்டோ, நெல்சன் பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் விவசாய தலைவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மறை மாவட்ட தென்மண்டல களபணியாளா் பீட்டா் இசக்கிமுத்து தொகுத்து வழங்கினாா்.

மறை மாவட்ட எஸ்சி, எஸ்டி கமிஷன் செயலா் ஹாா்ட்மன், தென்மண்டல மாநில ஒருங்கிணைப்பாளா் ஜாா்ஜ் ராஜேந்திரன், பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி பேராசிரியா் தமிழனியன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் மண்டல அளவில் ஒருங்கிணைப்பு பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள், விவிலியம் வாசிப்பு நடைபெற்றது.

இதில் கீழக்குளம் பள்ளித் தலைமை ஆசிரியா் மேரி இம்மாகுலேட், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளா் இசக்கிமுத்து, தென்மண்டல ஒருங்கிணைப்புகுழு அமைப்பாளா் செங்கோல்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா். உரிமை வாழ்வு பனிக்குழு இயக்குநா் ராபின்ஸ்டான்லி வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் சகாய அரசு நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →