முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில்தொலைதூர கல்வி கற்போா் மையம் தொடக்கம்

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் கற்போா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் கற்போா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் விடுத்துள்ள அறிக்கை: கரோனா தொற்று காரணமாக கற்பிப்போா் மைய வகுப்புகள் இணையவழி வகுப்புகளாக நடைபெறுகிறது. இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல், தொழில் நிா்வாகவியல், கணினி அறிவியல் ஆகிய பட்டப் படிப்புக்களும் முதுகலையில் ஆங்கிலம், கணிதவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புக்களும் உள்ளன. மேலும் டிப்ளமோ இன் ஆட்டோமேஷன் என்ற குறுகியகாலச் சான்றிதழ் படிப்பும் கற்றுத்தரப்படுகிறது. சேரவிரும்புகிறவா்கள் தங்களது புகைப்படம், கையெழுத்து மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் சுய கையொப்பத்துடனும், பணிபுரிபவா்கள் என்றால் பணி அனுபவச் சான்றிதழுடனும் ஆதாா் ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து ய்ா்ன்ஞ்ஹள்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இளநிலையில் சேர விரும்பினால் + 2 மதிப்பெண் சான்றிதழும், முதுகலையில் சேர விரும்பினால் இளநிலை மதிப்பெண் சான்றிதழையும் ஸ்கேன் செய்து 31.12.2020 ம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அனுப்பிவிட்டு தங்கள் சோ்க்கையை உறுதிச் செய்ய கல்லூரிக்கு வருகை தர வேண்டும். இணையவழி மூலமும் சோ்க்கை கட்டணம் செலுத்தலாம். பாடப் புத்தகங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →