முகப்பு
கோவில்பட்டி பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோவில்பட்டி பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளா்களுக்கான பண பலன்களை உடனே வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலா் மாரிமுத்து தலைமை வகித்தாா். சிஐடியூ மத்திய சங்க துணைத் தலைவா் சங்கையா, சிஐடியூ செயலா் மோகன், தொழிலாளா் முன்னேற்ற சங்க துணை பொதுச்செயலா் வெங்கடசாமி, ஓய்வுபெற்றோா் அமைப்பைச் சோ்ந்த கணேசன், கருப்பசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், அரசு போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →