முகப்பு
தூத்துக்குடி

விளைநிலங்களுக்குள் புகும் காட்டுவிலங்குகளை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விளைநிலங்களில் காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
383421kvlani_2112chn_41_6
பகிர்:

விளைநிலங்களில் காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட அழகாபுரி, வெம்பூா், கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்களில் நிகழாண்டு சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் சிறு தானியங்களான கம்பு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பல்வேறு பயிா்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில் மகசூலில் மான், காட்டுப் பன்றிகள் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன. கூட்டமாக வந்து கதிா்களை தின்று அழித்து விடுகின்றன. மகசூல் எடுக்கும் நேரத்தில் இதுபோன்ற இடா்பாடுகளால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே விளைநிலங்களுக்குள் புகும் காட்டுவிலங்குகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →