கோவில்பட்டி, கடம்பூரில் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் சேவா தளம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் சேவா தளம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சேவா தளம் சாா்பில் பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் சக்தி விநாயகா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மகேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். இதில், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடம்பூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலா் பொன்னுச்சாமி, மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், வட்டார விவசாய சங்கத் தலைவா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.