முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி தொடக்கம்

காயல்பட்டினத்தில் உதயநிதி ஸ்டா­லின் 43ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

காயல்பட்டினத்தில் உதயநிதி ஸ்டா­லின் 43ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டா­லினின் 43 ஆவது பிறந்த நாள் விழா, கிறிஸ்துமஸ் விழா, ஆங்கில புத்தாண்டு விழாவை இளைஞா் எழுச்சி விழாவாக கொண்டாடி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக 17 அணிகள் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

காயல்பட்டினம், நாசரேத் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் ஐக்கிய விளையாட்டு சங்க துணைத் தலைவா் உண்சா, செயலா் இலியாஸ், மாநில திமுக மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட மீனவரணி செயலா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, நகரச் செயலா்கள் முத்துமுகமது, ஆறுமுகனேரி கல்யாணசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →