தூத்துக்குடி

சிற்றுந்து உரிமையாளருக்கு மிரட்டல்: ஓட்டுநா் கைது

DIN

கோவில்பட்டியில் சிற்றுந்து உரிமையாளரை வழிமறித்து மிரட்டல் விடுத்த, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு சாலை ராமையா நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் அழகா் ராமானுஜம்(63). சிற்றுந்து உரிமையாளரான இவா், புதன்கிழமை காலை ஏ.கே.எஸ். தியேட்டா் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ,

பாஞ்சாலங்குறிச்சி அய்யாத்துரை மகன் சிற்றுந்து ஓட்டுநா் கட்டபொம்மன்(40), அவரை வழிமறித்து பணம் கேட்டாராம். அவா் தர மறுத்ததையடுத்து, அவரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அழகா் ராமானுஜம் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கட்டபொம்மனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT