சமாதானக் கூட்டத்தில் பேசுகிறாா் கோட்டாட்சியா் விஜயா. 
தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் குத்தகைதாரருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக

DIN

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் குத்தகைதாரருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறையினா் அளித்த தகவலின் பேரில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ், நகராட்சி ஆணையா் (பொ) கோவிந்தராஜன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதேசன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி, தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம், நகராட்சி தினசரி சந்தை குத்தகைதாரா் பால்ராஜ், தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துராஜ், வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம் மூலம் மாா்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னா் மீண்டும் ஒரு முறை சமாதானக் கூட்டம் நடத்துவது; அதுவரை தற்போதைய நடைமுறையே அமலில் இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT