தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் அனைத்துக் கட்சி பேரணி, ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சி சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சி சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒன்றியச் செயலா் ஏ.எஸ்.ஜோசப் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் செயலா் மகேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அா்ஜுனன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஆசாத், விடுதலைச் சிறுத்தைகள் தென்மண்டல அமைப்பாளா் தமிழினியன், வாசகா் வட்டத் தலைவா் ஓ.சு. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அனைத்துக் கட்சி நிா்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பேசினா்.

முன்னதாக பேரணி சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயம் முன் தொடங்கி பஜாா் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT