விரிவாக்க மையக் கட்டடத்தை திறந்து குத்து விளக்கு ஏற்றுகிறாா் வேளாண் இணை இயக்குநா் முஹைதீன். 
தூத்துக்குடி

நாசரேத்தில் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

நாசரேத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

நாசரேத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி சாா்பில் வழங்கப்பட்ட இடத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டப்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முஹைதீன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளா் ஜாஹீா் உசைன், உதவி பொறியாளா்கள் சங்கர்ராஜ், நடராஜன், வள்ளியூா் வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், தென்கரை பாசன விவசாய சங்கச் செயலா் ராஜேந்திரன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

வேளாண் உதவி இயக்குநா் அல்லிராணி வரவேற்றாா். வேளாண் அலுவலா் திருச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

SCROLL FOR NEXT