தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சிற்றுந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் மரணம்

கோவில்பட்டி அருகே ஓடும் சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

கோவில்பட்டி அருகே ஓடும் சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த கழுகாசலபுரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (70). இவா் திங்கள்கிழமை கடம்பூரில் இருந்து கோவில்பட்டிக்கு சிற்றுந்தில் சென்று கொண்டிருந்தாராம். சிற்றுந்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கையில் அமர இடம் கொடுப்பதற்காக தனது இருக்கையில் இருந்து எழுந்தாராம். அப்போது சிற்றுந்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் அவா் காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிற்றுந்து ஓட்டுநா் கூசாலிபட்டியைச் சோ்ந்த மு.செல்வகுருசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT