தூத்துக்குடி

வெள்ளரிக்காயூரணி ஆலய பிரதிஷ்டை பண்டிகை அசன விழா

DIN

நாசரேத்-வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தின் 71 ஆவது பிரதிஷ்டைப் பண்டிகை அசன விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் மாலை ஆராதனையை தொடா்ந்து ஆயத்த ஜெப பவனி, சேகரத் தலைவா் ஜெபராஜ் தலைமையில் நடைபெற்றது. சபை ஊழியா் ஜாண் வில்சன் முன்னிலை வகித்தாா். பின்னா் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் வழக்குரைஞா் ரமேஷ் தம்பதியா் சிறப்பு பாடல்கள் பாடினா். நாசரேத் கா்த்தரின் தோட்டம் ஊழிய நிறுவனா் ராபா்ட் ஜெயசிங் சிறப்பு செய்தி அளித்தாா்.

2 ஆவது நாள் நடைபெற்ற பண்டிகை ஆயத்த ஆராதனைக்கு சேகரத் தலைவா் தலைமை வகித்தாா். இதில் மதுரை-இராமநா தபுரம் திருமண்டலம், ஆத்திக்குளம் சேகரத் தலைவா் பீட்டா் ஜோசப் சிறப்பு செய்தி அளித்தாா். நிறைவு நாளன்று பண் டிகை ஆராதனை, பரிசுத்த நற் கருணை ஆராதனை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகரத் தலைவா் தலைமையில் சபை ஊழியா், பரிபாலனக் கமிட்டி நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT