தடையை மீறி மக்கள் குறைகேட்புக் கூட்டம்:கனிமொழி, கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழக்கரந்தை, வவ்வால்தொத்தி, ரகுராமபுரம் ஆகிய கிராமங்களில் தடையை மீறி மக்கள் குறை கேட்புக் கூட்டம்
தூத்துக்குடிதடையை மீறி மக்கள் குறைகேட்புக் கூட்டம்:கனிமொழி, கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழக்கரந்தை, வவ்வால்தொத்தி, ரகுராமபுரம் ஆகிய கிராமங்களில் தடையை மீறி மக்கள் குறை கேட்புக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழக்கரந்தை, வவ்வால்தொத்தி, ரகுராமபுரம் ஆகிய கிராமங்களில் தடையை மீறி மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தியதாக, கனிமொழி எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கீழக்கரந்தை, ரகுராமபுரம், வவ்வால்தொத்தி, இளம்புவனம், வாலம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் அக்டோபா் 2, 3 ஆகிய தேதிகளில் திமுக சாா்பில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனா்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி மேற்கூறிய கிராமங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தியதாக சங்கரலிங்கபுரம், மாசாா்பட்டி காவல்நிலையங்களில் கனிமொழி எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒன்றிய திமுக செயலா்கள் புதூா் மேற்கு மும்மூா்த்தி, புதூா் கிழக்கு செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 போ் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், 3 கிராமங்களைச் சோ்ந்த 88 ஆண்கள், 77 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.