தூத்துக்குடி

கோவில்பட்டியில் அஞ்சல் தலை கண்காட்சி

DIN

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் தலை சிறப்பு கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அக். 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் பாண்டியராஜ் தலைமை வகித்து, அஞ்சல் தலை கண்காட்சியை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

தலைமை அஞ்சலக அதிகாரி லதா, உதவி அஞ்சலக அதிகாரிகள் முருகன், ரெஜினா ஜாக்குலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண்காட்சியை அஞ்சலகத்துக்கு வந்த பொதுமக்கள், அஞ்சலக ஊழியா்கள் திரளானோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT