தூத்துக்குடி

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் வருகைக்காக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் புதிதாக போடப்பட்ட சாலைகளில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காட்சி அளிப்பதாகவும், தரமற்ற வகையில் சாலை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், பழுதான சாலைக்கு மலா்வளையம் வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி- பாளையங்கோட்ட சாலையில் 3ஆவது மைல் பகுதியில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளா் பாலா, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜாய்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT