கோவில்பட்டியில் நடைபெற்ற பிரசாரப் பயண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகிறாா் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவா் வேலூா் எம்.இப்ராஹிம். 
தூத்துக்குடி

மக்கள் நலத்திட்ட பிரசார யாத்திரைக்கு வரவேற்பு

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பிரசார யாத்திரைக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

DIN

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பிரசார யாத்திரைக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரோனா தொற்று காலத்தில் ஏழை மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞா்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அளித்துள்ள முன்னுரிமை, விவசாயிகளுக்க ஊக்க நிதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவா் வேலூா் எம்.இப்ராஹிம், கன்னியாகுமரியில் இருந்து பிரசார யாத்திரை தொடங்கினாா்.

இப்பிரசார யாத்திரைக்கு கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுசெயலா்கள் பாலாஜி, சரவண கிருஷ்ணன், நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், பட்டியல் அணி மாநிலச் செயலா் சிவந்தி நாராயணன், மாவட்டத் துணைத் தலைவா்கள் போஸ், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT