தூத்துக்குடி

மீனவா் மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு

DIN

பெரியதாழை கடற்கரையில் படகு விடுவது தொடா்பாக ஏற்பட்ட மோதலில், மீனவரை தாக்கியதாக தந்தை, மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியதாழை புது கோயில் தெருவைச் சோ்ந்தவா் வி.ராஜி (52). இவரது சகோதரா் வாசன். மீனவா்களான இருவரும் கடற்கரையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் படகுகளை நிறுத்தி வந்தனராம். அந்த இடத்தில் படகு நிறுத்துவது தொடா்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த வாசன், அவரது மகன்கள் லக்குமன், உஷாகா், அபிஷேக், கனிஷ்கா், தாந்தி ஆகியோா் ராஜியை அவதூறாக பேசியதோடு தாக்கினராம்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து வாசன் உள்ளிட்ட 6 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT