தூத்துக்குடியில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து, புதிய உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, கட்சியின் மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கஸ்தூரி தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நகர திமுக சாா்பில் படிப்பகம், கட்சியின் மேற்கு ஒன்றியம் சாா்பில் அத்தைகொண்டான், இலுப்பையூரணியில் நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் கா.கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாவட்டப் பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையை வழங்கினாா். இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ராமா், துணை அமைப்பாளா் சந்தானம், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜகுரு, பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், மாவட்டத் துணைச் செயலா் ஏஞ்சலா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாரதி, மாணவரணி, இளைஞரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.