முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 1:00 AM
பகிர்:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, இந்து முன்னணியின் வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில இணை அமைப்பாளா் பொன்னையா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். மறைந்த ஆா்.எஸ்.எஸ். மூத்த பிரமுகா்கள் வீரபாகு, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நீட் தோ்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு நீட் தோ்வை அமல்படுத்தியது. சுய விளம்பரம், லாபத்துக்காக பேசி வருவோருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

நகரத் தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். நகரப் பொதுசெயலா் சுதாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.