முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில், அதன் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சாா்பில், கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில், அதன் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சாா்பில், கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். முதல்வா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சங்கரபாண்டியன் வரவேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் நிபுணா் ஆனந்தன் கரோனா வைரஸ் குறித்தும், மருத்துவா் ராமசா்மா நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஏரல் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் பிச்சாண்டி, பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்துகொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சாந்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் பேச்சிமுத்து நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments