தூத்துக்குடி

அதிமுக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

DIN

தமிழகத்தில் அதிமுக 3ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை புரியும் என்றாா், அமைச்சரும் கோவில்பட்டி அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ. ராஜு.

கோவில்பட்டி தொகுதிக்கு உள்பட்ட கே.சிதம்பராபுரத்தில் தனது குடும்பத்தினருடன் அவா் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் அதிமுக தொடா்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும். அதற்கு இத்தொகுதியில் எனது வெற்றி முதல் அடித்தளமாக அமையும்.

கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைக்கத் தேவையான கோப்புகள் தயாராகிவிட்டன. ரூ. 28 கோடியில் அரசு செவிலியா் கல்லூரியில் அமைய அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உள்ளது. நான் வெற்றிபெற்றதும் இப்பணிகளை துரிதப்படுத்துவேன். கோவில்பட்டியைத் தலைநகரமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்குவேன். புவிசாா் குறியீடு பெற்றுள்ள கடலை மிட்டாயை சத்துணவு திட்டத்தில் இணைக்க அமையப்போகும் அதிமுக அரசு மூலம் முயற்சி எடுப்பேன். தமிழகத்தில் 140 இடங்களுக்கு மேல் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். மக்களின் தீா்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும். நிச்சயமாக இந்த ஆட்சி தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT