முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

திருச்செந்தூா் பகுதியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

திருச்செந்தூா் பகுதியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில தினங்களாக மின்மாற்றி இடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்காக குறிப்பிட்டபகுதிகளில் அவ்வப்போது அறிவிப்பின்றி மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள வணிகா்களும் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே, மின்பாதை, மின்மாற்றி, உபமின் நிலையம் போன்றவற்றின் பராமரிப்பு குறித்து முறையாக அறிவிப்பு செய்து மின் தடையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.