தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த காவல்துறையினருக்கு அவா் பரிசு வழங்கிப் பாராட்டியதுடன், ஓட்டுநா்களிடம் வாகனங்கள் மற்றும் அவா்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தாா்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, வழக்குகள் தொடா்பான நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வாளா்களிடம் கேட்டறிந்தாா்.