கோவில்பட்டியில் இன்று மின்தடை
கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான உபகரணத்தை மாற்றும் பணிக்காக அதன் மின்பாதை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 21) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான உபகரணத்தை மாற்றும் பணிக்காக அதன் மின்பாதை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 21) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில்பட்டி நகரம், புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகமதுசாலியாபுரம், மூப்பன்பட்டி, இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.