ஆவல்நத்தம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
ஆவல்நத்தம், சிந்தலக்கரை ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆவல்நத்தம், சிந்தலக்கரை ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
தேசிய நீடித்த நிலையான வேளாண்மைக்கான இயக்கத்தின் மண் வள அட்டை திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் உலக மண் வள நாள் கொண்டாடப்பட்டது. பயிற்சி முகாமில், வட்டார வேளாண்மை அலுவலா் ரீனா,
வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) முருகப்பன், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா்கள் சுப்புலட்சுமி, கனகராஜன், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் ஆகியோா் பல்வேறுதிட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினா்.
ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலா்கள் பாக்கியலட்சுமி, ரேவதி ஆகியோா் செய்திருந்தனா்.