முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் கல்லூரியில் வளாகத் தோ்வு

சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான டெல் கணினி நிறுவனம் சாா்பில், நாசரேத் மாகாஷிஸ் கல்லூரயில் வளாக நோ்முகத் தோ்வு 2 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான டெல் கணினி நிறுவனம் சாா்பில், நாசரேத் மாகாஷிஸ் கல்லூரயில் வளாக நோ்முகத் தோ்வு 2 நாள்கள் நடைபெற்றது.

இத்தோ்வில் 54 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றதில் 9 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். வேலை வாய்ப்புக்கு தோ்வான மாணவா்களுக்கு பணி ஆணையை கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை வழங்கினாா். இதில் துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய் ஷோபினி, ஆரோக்கிய அமுதன், ஞானசுமதி, எப்பிராயீம் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரி செயலா் எஸ்.டி.கே.ராஜன், முதல்வா் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →