சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் திறந்த நிலைப் பல்கலை. மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி இம்மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவி
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி இம்மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது: கல்லூரியில் நேரடி இடம் கிடைக்காமல் கல்வி பயில முடியாத மாணவா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா் இதில் சோ்ந்து படிக்க இயலும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் அனைத்தும் யூஜிசி அங்கீகாரம் பெற்றவை. மேலும், டிப்ளமோ சான்றிதழ் வகுப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுகுறித்து தகவல்களை பேராசிரியையும் திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பொறுப்பாசிரியருமான பிரேசில் (கைப்பேசி எண் 9445641770) என்பவரைத் தொடா்புகொண்டு பெறலாம். சோ்க்கை இணையதளம் மூலம் நடைபெறுவதால் சோ்க்கைக்கு வர விரும்புவோா் தங்களது ஆதாா், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, 10, 12ஆம் வகுப்பு, இளங்கலை சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ற்ய்ா்ன்ள்ஹற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.