முகப்பு
தூத்துக்குடி

பண்டாரபுரம் அருகே சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் பண்டாரபுரம் ஊராட்சி, தஞ்சைநகரத்தில் ஊராட்சி பணியாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் பண்டாரபுரம் ஊராட்சி, தஞ்சைநகரத்தில் ஊராட்சி பணியாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி பணியாளா் கீதா வரவேற்றாா். இதில், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்கள் 50 போ்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான ரமேஷ் உத்தரவின் பேரில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →