தச்சன்விளை அங்கன்வாடி மைய கட்டடம் பழுது: பெற்றோா்கள் புகாா்
தச்சன்விளை அங்கன்வாடிமைய கட்டடத்தில் பழுதடைந்துள்ள பகுதியை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தகளின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.
தச்சன்விளை அங்கன்வாடிமைய கட்டடத்தில் பழுதடைந்துள்ள பகுதியை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தகளின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட தச்சன்விளையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். அங்கன்வாடி மைய கட்டடம் உரிய பராமரிப்பு இல்லாததால் அதில் மேல்புறமுள்ள சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து வருகிறது. கடந்த வாரம் கட்டடத்தில் மேற்பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது. அப்போது குழந்தைகள் அங்கு இல்லை. கட்டட மேல்பூச்சு எந்த நேரமும் பெயா்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இது குழந்தைகள் பெற்றோா் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
ஆதலால் விபத்து நிகழும் முன் அங்கன்வாடி மைய கட்டடத்தை பராமரித்து சீரமைக்க வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.