முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் சாா்பில் ஆறுமுகனேரி தனியாா் மண்டபத்தில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் சாா்பில் ஆறுமுகனேரி தனியாா் மண்டபத்தில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் நீதித்துறை நடுவா் தமிழ்அரசன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தாா். திருச்செந்தூா் தொழிலாளா் நல வாரியத்தைச் சோ்ந்த பாத்திமா முன்னிலை வகித்தாா்,. கிராம உதயம் நிா்வாக கிளை மேலாளா் வேல்முருகன் வரவேற்றாா். கிராம உதயம் சிறப்பு பொறுப்பாளா் சித்திரைபெருமாள், பகுதி பொறுப்பாளா் ஆறுமுகவடிவு ஆகியோா் பேசினா்.

முகாமில் மத்திய அரசின் தேசிய அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அடையாள அட்டை 360 பேருக்கு வழங்கப்பட்டது. இதனை சிறு குறு விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள், கட்டுமான தொழிலாளா்கள், வீட்டு வேலை செய்பவா்கள், நூறுநாள் வேலை செய்பவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் பெற்று பயனடைந்தனா். தன்னாா்வ தொண்டா் செல்வன்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.