அமுதுண்ணாக்குடியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியில் நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியில் நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு பொது விநியோகத்திட்ட சாா்பதிவாளா் லதா தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், ஊராட்சித் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம் வரவேற்றாா். நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள பொன்னன் குறிச்சியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. எஸ். பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்து, நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அதிமுக செயலா் காசிராஜன், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், நகரச் செயலா் காசிராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.