‘தூத்துக்குடியில் 6 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்’
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும் என கட்சியின் அமைப்புச் செயலர் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும் என கட்சியின் அமைப்புச் செயலரும், வேளாண் விற்பனைக் குழுத் தலைவருமான சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை இம்மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்
ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
அதிமுக அரசின் சாதனைத் திட்டங்கள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்படன் பணியாற்றி வெற்றிபெற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், அமைப்புச் செயலரும், ஆவின் தலைவருமான என். சின்னதுரை, மாவட்ட பொருளாளா் அமலி டி. ராஜன், தலைமைக் கழக பேச்சாளா் எஸ்.டி. கருணாநிதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பிடிஆா் ராஜகோபால், பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.