முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் கருத்தரங்கு

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் மாணவா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் மாணவா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் சாமுவேல் தங்கராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

திட்ட அலுவலா் சாந்திசலோமி வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியா் அன்புசெல்வன் ஆகியோா் பேசினா்.

பேராசிரியை ஷொ்லின் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். திட்ட அலுவலா் பியூலா ஹேமலதா நன்றி கூறினாா்.  ஏற்பாடுகளை திட்ட அலுவலா் சீயோன் செல்லரூத் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →