முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 17.82 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

தூத்துக்குடியில் 42 பேருக்கு ரூ. 17.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தூத்துக்குடியில் 42 பேருக்கு ரூ. 17.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

வருவாய்த்துறை மூலம் 29 பேருக்கு தலா ரூ. 60, 000 வீதம் ரூ.17.40 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா,

2 பேருக்கு தலா ரூ. 1000 வீதம் மாற்றுத் திறனாளி உதவித்தொகை , பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் 8 பேருக்கு

தலா ரூ. 3 ,573 வீதம் ரூ. 28,584 மதிப்பில் தையல் இயந்திரம், 2 பயனாளிகளுக்கு ரூ. 5,341 வீதம் ரூ. 10,682 மதிப்பில்

தேய்ப்புப் பெட்டி, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரப்பெற்ற மனுவில் ஒரு பயனாளிக்கு ரூ.1000 மாற்றுத் திறனாளி உதவித்தொகை என மொத்தம் 42 பேருக்கு ரூ. 17, 82, 266 மதிப்பிலான நல உதவிகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மானாவரி மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ. 15 கோடியே 48 லட்சம் வரப்பெற்று, 12,984 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் தமிழரசி, பிற்படுத்தபட்டோா் நல அலுவலா் ஜீவரேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.