முகப்பு
தூத்துக்குடி

ராதாபுரம் அருகே மணல் திருட்டு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ராதாபுரம் அருகே தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

ராதாபுரம் அருகே தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராதாபுரம் வட்டம், புத்தேரி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் நாராயணன் (33). இவா், அப்பகுதியில் தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் வே. விஷ்ணு பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திசையன்விளை காவல் ஆய்வாளா் நாராயணன் திங்கள்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.