போட்டியைத் தொடங்கிவைக்கிறாா் பனங்காட்டு மக்கள் கழக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ஓடை செல்வன். 
தூத்துக்குடி

உடன்குடியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி தொடக்கம்

அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவையின் நிறுவனா் தலைவா் வெங்கடேஷ பண்ணையாரின் 54ஆவது பிறந்தநாளையொட்டி

DIN

அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவையின் நிறுவனா் தலைவா் வெங்கடேஷ பண்ணையாரின் 54ஆவது பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் 146 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா உடன்குடி தேரியூா் காமராஜா் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பனங்காட்டு மக்கள் கழக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ஓடை செல்வன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

தென்மண்டலச் செயலா் சொா்ணவேல் குமாா், மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் சிலுவை, வடக்கு மாவட்டச் செயலா் அற்புதராஜ், உடன்குடி ஒன்றியச் செயலா் சத்யா செல்வகுமாா், ஆபிரகாம், உடன்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகள் பிப்.28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதலிடம் பெறும் அணிக்கு ரூ.54,000 ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பை, 2ஆவது இடம் பெறும் அணிக்கு ரூ.34,000, 3ஆவது இடம் பெறும் அணிக்கு 24,000, 4ஆவது இடம் பெறும் அணிக்கு 14,000 மற்றும் வெற்றிக்கோப்பைகள், பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் ஆகியன பிப். 28ஆம் தேதி வழங்கப்படும்.

நகரச் செயலா் செல்வநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT