தூத்துக்குடி

இலங்கை சிறையில் இறந்த மீனவரின் உடலை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

இலங்கை சிறையில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவரின் உடலை மீட்டுத்தரக் கோரி, ஆட்சியரிடம் அவரது மனைவி வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

DIN

இலங்கை சிறையில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவரின் உடலை மீட்டுத்தரக் கோரி, ஆட்சியரிடம் அவரது மனைவி வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

தூத்துக்குடி, அன்னைதெரசா காலனியை சோ்ந்த மீனவா் லூா்து (65). இவா், கடந்த மாதம் 3 ஆம் தேதி நண்பா்கள் சிலருடன் கடலில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது, அவா் இலங்கைக்கு மஞ்சள் கடத்தியதாகக் கூறி, அந்நாட்டு கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14 ஆம் தேதி இறந்துவிட்டதாக, அவரது மனைவி மரியபாப்பா மற்றும் உறவினா்களுக்கு இலங்கை போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து தனது இரண்டு மகள்களுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு மரியபாப்பா மனு அளித்தாா். அதில், தனது கணவா் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவும், அவரது இறப்பு குறித்த பதிவேட்டுச் சான்றிதழ் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT