தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்தில் இளைஞா் பலி

DIN

கோவில்பட்டி அருகே பைக் மரத்தில் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி பாரதி நகா் 4ஆவது மேட்டுத் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அரவிந்த் (24). இவா் பைக்கில் முடுக்குமீண்டான்பட்டி - துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பைக் மோதியதாம். இதில் அரவிந்த் பலத்த காயமடைந்தாா்.

காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT