திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.
திருச்செந்தூரில் கடந்த இரு நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாா்கழி மாதத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் ஆவுடையாா்குளம், எல்லப்பநாயக்கன்குளம் முழுமையாக நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் இந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் ஓடை வழியாக தண்ணீா் கடலுக்கு பாய்கிறது.