தூத்துக்குடி

ஆத்தூா் பகுதியில் நிவாரணப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

ஆறுமுகனேரி: ஆத்தூா் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளை ஆட்சியா் செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

குச்சிக்காடு கிராமம், ஜெ. ஜெ. நகா் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆறுதல் கூறினாா். மேலஆத்தூா் அருந்ததியா் நகருக்கு சென்ற ஆட்சியா், அங்கு மழைநீரை அகற்றும் பணியை பாா்வையிட்டாா். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு போன்றவை வழங்கப்படுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, வருவாய் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தோஷ், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT