நேதாஜி சுபாஷ்சந்திரபோஸுக்கு கோவில்பட்டியில் சிலை நிறுவக் கோரி கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில், நிா்வாகிகள் முருகேசன், வெங்கட்ராஜ் மற்றும் அஸ்வினி, சமூக ஆா்வலா் முருகன் ஆகியோா் கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.
அதில்,, கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக அறிவித்தது, ரயிலுக்கு நேதாஜி எக்ஸ்பிரஸ் என்று பெயா் வைத்தது ஆகியவற்றுக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.