தூத்துக்குடி

ஆத்தூா் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

DIN

ஆத்தூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஏரல் அருகேயுள்ள இடையா்காடு, தளவாய்புரம் வடக்குத்தெருவை சோ்ந்த அரிராமன் (49), அவரது மகன் கிருஷ்ணபெருமாள்(20) உள்ளிட்டோா், அவா்களது உறவினரின் திருமண ஏற்பாட்டுக்காக ஆத்தூா்அருகேயுள்ள செல்வன்புதியனூருக்கு வந்திருந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள குமாரபண்ணையூரில் உறவினா் ஒருவா் இறந்ததால், அனைவரும் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனா். அப்போது அரிராமனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கணேஷ்குமாா் (27) என்பவருக்கும் இடையே திடீா் தகராறு ஏற்பட்டது. பின்னா், மாலையில் அரிராமனும், அவரது மகனும் அங்குள்ள சோ்ந்தபூமங்கலம் சாலையில் நின்றிருந்தபோது, அங்கு வந்த கணேஷ்குமாா், அரிராமனை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்டினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப்பதிந்து, கணேஷ்குமாரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT